அயோத்தியில் ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழா கோலாகம்

Ramar Kovil

அயோத்தியில் ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழா கோலாகம்

அயோத்தியில் ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா கோலகலமாக நடைபெற்றது.

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு இன்று(22.1.2024) நடைபெற்றது. கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சகட்ட சம்பிரதாயம் இது.  இதற்காக அயோத்தி நகர் முழுவதும் காவி கொடியுடன், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

இந்த நிகழ்ச்சியில் பாஜக., தலைவர்கள், முதல்வர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்ரோ தலைவர் சோமநாத், ரிலையன்ஸ்  குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்களான ரஜினிகாந்த், தனுஷ், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன்,சிரஞ்சீவி, கங்கனா  ரணவத், மாதுரி தீட்சித், கத்ரீனாகைப், ரன்பீர் கபூர், ஆலியா பட், ஜாக்கிஷெராப், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், அனில் கும்ளே உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அதுபோல் துறவியர், மடாதிபதிகள், சாதுக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கோவில் கருவறைக்குள் நடந்த சங்கல்ப் பூஜையில் பிரதமர் மோடி, மோகன் பகவத், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டனர். பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடைபெற்றது. இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு எதிரே 75 ஆண்டு பழமையான சிலையும் வைக்கப்பட்டுள்ளது. 

500 நூற்றாண்டு இடைவெளிக்கு பின்னர் ராமர் தன் பிறந்த வீட்டுக்கு வந்து விட்டார் என்பதை பிரகடனம் செய்யும் இந்த வரலாற்று நிகழ்வை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடினர். பக்தர்கள் பரவசத்துடன் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர். ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தி நகர் விழாக்கோலம் பூண்டது.