நாசரேத்தில் இலவச சிறப்பு பட்டா மாறுதல் முகாம்! நாளை(6ம்தேதி)நடைபெறுகிறது

nazareth

நாசரேத்தில் இலவச சிறப்பு பட்டா மாறுதல் முகாம்! நாளை(6ம்தேதி)நடைபெறுகிறது

நாசரேத்,டிச.05:நாசரேத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி யின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு நாசரேத்தில் இலவச பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து 06.12.2023 புதன் கிழமை நடைபெறுகிறது. 

இதுகுறித்து ஏரல் வட்டாட்சியர்  கைலாசகுமாரசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-   "தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட  ஏரல் வட்டம்,நாசரேத் கிராமத்தில் புதன்கிழமை 06.12.2023  காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

மேற்படி முகாமில் வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல்,  வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம்,  வருவாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.