கபடி போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி

nazareth

கபடி போட்டியில் நாசரேத்  மர்காஷிஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி

நாசரேத், டிச.05:கபடி போட்டியில் நாசரேத்  மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு இடையேயான வட்டார அள விலான கபடி போட்டிகள் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள  குலசேகரநத்தம்  பகுதியில் நடைபெற்றது. பல்வேறு பள்ளியை சார்ந்த மாணவர்கள் கபடி போட்டி யில் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் முதல் பரிசை நாசரேத்  மர்காஷிஸ்  மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் பெற்றனர். முதல் பரிசாக  ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற மாணவர்களுக்கு மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர்  கென்னடி வேதராஜ் கபடி அணி வீரர்களை பாராட்டி பரிசு கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர்,உடற் கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வ சுந்தர், ஆசிரியர்  ஆசிரியைகள்,  அலுவலகப் பணியாளர்கள் மற்றும்  மாணவர்கள் கலந்து கொண்டனர்.