தூத்துக்குடியில் ஈஷா தன்னார்வலர்கள் சார்பில் மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

isha

தூத்துக்குடியில் ஈஷா தன்னார்வலர்கள் சார்பில் மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் ஈஷா தன்னார்வலர்கள் சார்பில் மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

மண்ணின் அருமை,பெருமை மற்றும் அதன் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு. அதற்காக மண் காப்போம் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கத்தின் வாயிலாக உலக மக்களிடம் விவரித்து வரும் சத்குரு, COP28 அரங்கத்தில் உலக தலைவர்களிடம் பேசுகிறார். 

இந்தநிலையில் உலக மண் தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 5ம் தேதி) மண் காப்போம் இயக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் ஒன்றிணைந்து அருள்ராஜ் மருத்துவமனை அருகில் உள்ள ஐ லவ் யூ தூத்துக்குடி முன்னிலையில் போட்டோ எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் மண் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.