நாசரேத் தூய யோவான் பேராலய ஊழியர்கள் சந்திப்பு!

nazareth

நாசரேத் தூய யோவான் பேராலய ஊழியர்கள் சந்திப்பு!

நாசரேத், ஜன.03: நாசரேத் தூய யோவான் பேராலய ஊழியர்கள் சபை மக்க ளால் சந்திக்கும் நிகழ்வு பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் உள்ள சபை ஆயர்கள் ஆண்டு தோறும் சபை மக்களால்  புத்தாண்டு தினத்தன்று கௌரவப்படுத்துதல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைப் பாதிரியார் ஹென்றி ஜீவானந்தம், உதவிப் பாதிரியார் பொன் செல்வின் அசோக்குமார் ஆகியோர் சபை மக்களால் கௌரப்படுத்துதல் நிகழ்வு பேராலய மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. 

இந்நிகழ்வில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்வின், தூய யோவான் பேராலய அசனக் கமிட்டி பொருளாளர் ஆர்.லேவி அசோக் சுந்தர்ராஜ், முன் னாள் சேகர பொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ், முன்னாள் சேகர செயலா ளர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வினை சபை ஊழி யர் ஜெபராஜ் சாமுவேல் தொகுத்து வழங்கினார்.  வே. இரஞ்சன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் சபை ஊழியர் ஜெசு மற்றும் சைமன் சபை மக்கள் திர ளாக கலந்து கொண்டனர் நிறைவாக தலைமைப் பாதிரியார் ஹென்றி ஜீவானந்தம் ஆசி வழங்கினார்.