தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி நாளை வேட்பு மனு தாக்கல் - எஸ்.பி. சண்முகநாதன், கடம்பூர் ராஜு தகவல்

ADMK Election news

தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி நாளை வேட்பு மனு தாக்கல் -  எஸ்.பி. சண்முகநாதன், கடம்பூர் ராஜு தகவல்

தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை : 

நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளராக ஆர். சிவசாமி வேலுமணி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அஇஅதிமுக வேட்பாளர்களை நாளை  (25.03.2024) வேட்பு மனு தாக்கல் செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சிவசாமி வேலுமணி நாளை ( 25.03.2024) திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி டூவிபுரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். 

இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, மாநகரப் பகுதி,பேரூராட்சி, வட்ட, வார்டு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மகளிர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.