தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து - விமானப்படை அதிகாரி பலி

Accident

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து - விமானப்படை அதிகாரி பலி

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் ஊரை சேர்ந்தவர் போத்தியாபிள்ளை மகன் மாணிக்கம்(60). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. அப்பகுதி எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆக இருந்து வந்தார். இந்தநிலையில் இன்று (11.11.2023)காலை மாணிக்கம் தனது பைக்கில் தூத்துக்குடி நோக்கி சென்றார். மறவன்மடம் பஸ் நிறுத்தத்தை தாண்டி சென்ற போது, எதிரே வந்த லாரியும், இவரது பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த புதுக்கோட்டை போலீசார், மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

இது குறித்து  புதுக்கோட்டை காவல்நிலைய எஸ்.ஐ ஞான்ராஜ் வழக்கு பதிவு செய்தார். ஆய்வாளர் வின்செண்ட் அன்பரசி விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணையில் லாரி ராங்க் சைடில் வந்திருப்பது தெரிகிறது.