நியூஸ் 7 செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் கண்டனம் - சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு

C.M.Action

நியூஸ் 7 செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் கண்டனம் - சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு

பல்லடம் பகுதி நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு சில மர்மநபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெருவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், செய்தியாளர் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : திருப்பூர் மாவட்டம் பகுதியை சேர்ந்த தனியார் தொலைகாட்சி ஒன்றின் செய்தியாளர் நேச பிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களா தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேசபிரபு காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும், செய்தியாளர் நேசப் பிரபுவிற்கு, பத்திரிக்கையாளர் நல வாரியத்திலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.