நியூஸ் 7 செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

News 7 Reporter

நியூஸ் 7 செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை  கண்டித்து தென்காசியில்  கண்டன ஆர்ப்பாட்டம்!

நாசரேத், ஜன.25:நியூஸ் 7 செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை  கண்டித்து தென்காசியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம் நியூஸ் 7 நிருபர்  நேசபிரபு தாக்குதலை கண்டித்து    தென்காசி பிரஸ் கிளப் அருகில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை வகித்தார்.

மாநில துணை தலைவர் தூத்துக்குடி ஜெ.நிக்சன், மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் ஏ.லட்சுமணன், வட சென்னை நிர்வாகி ஐ.கேசவன் ஆகியோருடன், தென்காசி மாவட்ட நிர்வாகிகள்  முத்துச்சாமி, ராஜேந்திரன், கணேசன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் நியூஸ்7 செய்தியாளர் நேச பிரபுவை தாக்கிய கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும், பத்திரிக்கையாளர் பணி பாதுகாப்பு சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும், செய்தியாளரை தாக்கியவர்களுக்கு துணை போகும் காவல்துறையினரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. செய்தியாளர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.