நாசரேத்தை தனித்தாலுகாவாக்க உருவாக்க வேண்டும்! நகர வியாபாரிகள் சங்கம் தீர்மானம்!!

Nazareth news

நாசரேத்தை தனித்தாலுகாவாக்க உருவாக்க வேண்டும்! நகர வியாபாரிகள் சங்கம் தீர்மானம்!!

நாசரேத்,ஆக.3:நாசரேத்தை தனித்தாலுகாவாக உருவாக்க வேண்டும் என நாசரேத் நகர வியாபாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாசரேத் நகர வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா நடைபெற்றது. தலைவர் எட்வர்ட் கண்ணப்பா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஞானையா வரவேற்று பேசினார்.பொதுச்  செயலாளர் இராவி அசுபதி சந்திரன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.பொருளாளர் ஜெயக்குமார் வரவு செலவை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக காவல் உதவி ஆய்வாளர் ராய்ட்சன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்.

கூட்டத்தில் நாசரேத்தை தனித்தாலுகாவாக ஆக்கவேண்டும், மூடிக்கிடக் கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைதிறக்க வேண்டும், பல ஆண்டுகளாக செயல் படாமல் மூடியே கிடக்கும் திருச்செந்தூர் கூட்டு றவு நூற்பாலை இயங்கி வந்த இடத்தில் அரசு வேறு ஏதேனும் தொழிற்சாலை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன. முடிவில் சங்க இணைச் செயலாளர் டி.டி. புருஷோத்தமன் நன்றி கூறினார்.