மூலக்கரை பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

moolakkarai

மூலக்கரை பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

 நாசரேத் ஆக.3 மூலக்கரை பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. 

நாசரேத் அருகே உள்ள கடையனோடை சேகரம் மூலக்கரை டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளியில்  இடை நிலை ஆசிரியையாக 34ஆண்டுகள் பணியாற்றிய ஏசுவடியாள் செல்வி ஓய்வு பெற்றமைக்கு அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

கடையனோடை சேகரகுருவானவரும், பள்ளி தாளாளருமான ஆசீர் சாமுவேல் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். சாத்தான்குளம் வட்டார கல்வி   அலுவலர் ரோஸ்லின் ராஜம்மாள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை மில்காள் கல்பனா, பெற்றோர் சார்பில் ஜெபினா, சுபா, கார்த்திகா, கடையனோடை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோன்  தனசிங் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். ஆசிரியை ஏசுவடியாள் செல்விக்கு  பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டன.

இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், சேகர ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள்,   முன்னாள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.