பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
Panikkanadarkudiiruppu news
குரும்பூர், ஆக.3- பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் வித்யாதரன் வரவேற்றார். பள்ளி செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசினார். முன்னதாக நிர்வாக அலுவலர் சுரேஷ் காமராஜ் வாழ்த்தி பேசினார். தமிழாசிரியர் ராஜகுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதில் செல்வ விநாயகர் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் துரை சதிஷ்ராஜ், மாணிக்கம், பொன்சுந்தர், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். துணைத்தலைமை ஆசிரியர் ஜேசுதாசன் நன்றி கூறினார்.