பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு 22பேர் பலி

Pakistan train accident

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு 22பேர் பலி

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு 22பேர் பலியாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

பாகிஸ்தான், கராச்சியில் இருந்து 275 கி.மி தொலைவில் சற்று முன் ரயில் விபத்து நடந்துள்ளது. ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் 17 பெட்டிகளுடன் சென்றது. 

அது சஹாரா ரயில் நிலையம் அருகில் சென்றபோது 10 பெட்டிகள் தடம் புரண்டு ரயில் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 22 பேர் பலியானார்கள். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  

ரயில் அதிவேகமாக வந்ததால் விபத்து நடந்ததா? வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.