தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணி - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

18 Railway stations improvement works in tamil nadu

தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணி - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் 18 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியினை பிரதமர் நரேந்திர மோடி இன்று(6.8.2023) தொடங்கி வைத்தார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணியினை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள பெரம்பலூர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், தென்காசி, விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் தொடங்கப்பட்டன. 

இதேபோல் புதுச்சேரி ரயில் நிலையம், கேரளாவில் காசர் கோடு, பையனூர், வடக்காரா, திரூர் மற்றும் சொரணூர் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களும், கர்நாடகாவில் பெங்களூரு ரயில் நிலையம் என மொத்தம் 25 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.616 கோடி ஆகும். தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட உள்ள 18 ரயில் நிலையங்களில் மொத்தம் திட்ட மதிப்பு ரூ.381 கோடி ஆகும். ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணியினை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.