ஆதிநாதபுரத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்கள் - சகோ.மோகன் சி. லாசரஸ் திறந்து வைத்தார்

Nalumavadi

ஆதிநாதபுரத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்கள் -  சகோ.மோகன் சி. லாசரஸ்  திறந்து வைத்தார்

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிநாதபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., சகோ.மோகன் சி.லாசரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிநாதபுரம் சமத்துவபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தரவேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மற்றும் நாலுமாவடி புது வாழ்வு சங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41லட்சம் மதிப்பில் நாலுமாவடி புதுவாழ்வு சங்கத்தின் சார்பில் ரூ.13.67லட்சம் பங்களிப்புடன் புதியதாக பள்ளி கட்டிடங்களை கட்டி கொடுப்பதற்கு  ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா  நடைபெற்றது. விழாவிற்கு, ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை வகித்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமா, ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியலீலா, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கினர். 

இந்நிகழ்வில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய சமூக சேவை பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதாபொன்இசக்கி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், திமுக ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், வட்டாரத் தலைவர்கள் ஆழ்வை கோதண்டராமன், ஸ்ரீவை நல்லகண்ணு, முன்னாள் நகர தலைவர் பாலசுப்பிரமணியன், ஆதிநாதபுரம் பஞ்சாயத்து தலைவி முத்துமாலை, துணைத்தலைவர் ராஜாத்தி, கராத்தே மாஸ்டர் முத்து, பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா,  தொடக்கப்பள்ளி ஜான்சன் ஊடகப் பிரிவு முத்துமணி, திமுக மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செம்பூர்விஜயன், காங்கிரஸ் நிர்வாகிகள் மோகன்ராஜ், சபாபதி, ராஜ், பாலகிருஷ்ணன், குமரன், இசக்கிராஜா, ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.