திங்கட்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை நிறுத்தி வைப்பு

election news

திங்கட்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை நிறுத்தி வைப்பு

திங்கட்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் 2024க்கான அட்டவணையினை  இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (16.03.24) அறிவித்ததின் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் மனு அளிக்க விரும்புவோர் அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்கள் மனுக்களை இடலாம் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.