மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் !

nazareth

மண்டல அளவிலான  பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான  விளையாட்டு போட்டிகள் !

நாசரேத்,ஜன.7:நாசரேத்தில் நடந்த மண்டல அளவிலான மாணவிகளுக்கான பாலி டெக்னிக் கல்லூரிகளுக் கிடையேயான  விளையாட்டு போட்டிகளை  கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் துவக்கி வைத்தார்.

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில்  திருநெல்வேலி மண்டல அளவிலான மாணவிகளுக்கான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான    விளையாட்டு போட்டிகள் நடந்தது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து போட்டி யை தொடங்கி வைத்தார் ‌. மாணவிகளுக்கு கேரம். செஸ், டேபிள் டென்னிஸ், பால் பேட்மேனின்  உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில்  மொத்தம் 5 பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை  தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல லே செயலாளரும், கல்லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ், பர்சார் தனபால், உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர்  மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.