நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பாலிடெக்னிக் கல்லூரியில் 75-வது குடியரசு தினவிழா

nazareth

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பாலிடெக்னிக் கல்லூரியில் 75-வது குடியரசு தினவிழா

நாசரேத்,ஜன.26:நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பாலிடெக்னிக் கல்லூரியில் 75-வது குடிய ரசு தினவிழா கொண்டாடப் பட்டது.கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை ஆற்றினார்.  

கல்லூரியின் தாளாளரும்,  தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின உரை ஆற்றினார்.  ஆட்டோ மொபைல் துறை தலைவர் ஜாண் வெஸ்லி உறுதி மொழி வாசித்தார். கணனி துறை இறுதியாண்டு மாணவி நிஷா குடியரசு தினம் குறித்து பேசினார். விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டது. மாண வ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.