பங்காரு அம்மா மக்கள் நலப்பணி சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் சமுதாயப் பணி

sakthi

பங்காரு அம்மா மக்கள் நலப்பணி சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் சமுதாயப் பணி

ஆன்மிககுரு பங்காரு அம்மா மக்கள் நலப்பணி சார்பில் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் சமுதாயப்பணி நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெர்மல்நகர், மேலூர், திருவிக நகர் சக்தி பீடங்கள் மற்றும் வழிபாட்டு மன்றங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவிக நகர் சக்தி பீடத்தில் அன்னை ஆதிபராசக்தி காசி ஸ்ரீ அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் ஆன்மிக குரு பங்காரு அம்மா அவர்களின் அருள் உத்தரவின்படி 37ம் ஆண்டு தீபாவளி சமுதாயப் பணி நடைபெற்றது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரையண்ட் நகர் 1வதுதெரு நேசக்கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம்,  நியு நேசக்கரங்கள் முதியோர் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா ஊனமுற்றோர் பள்ளி, லூசியா பார்வையற்றோர் குடியிருப்பு, கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ்நகர் அன்னை கருணை இல்லம், கதிர்வேல் நகர் ஆன்மாவின் உள்ளங்கள் முதியோர் இல்லம், சிதம்பரநகர் பாசக்கரங்கள் முதியோர் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழ அழகாபுரி பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், ட்ரூத்புல் மனநல காப்பகம், மெர்சி பார்வையற்றோர் இல்லம், நரிக்குறவர் குடியிருப்புகள் மற்றும் தெருவோர ஏழை மக்கள் உள்ளிட்ட 1,200 பேருக்கு நெய் மைசூர்பாகு, அதிரசம், முறுக்கு, மிக்சர், காரவடை, உளுந்து வடை உள்ளிட்ட பலகாரங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு ஆடைகள், போர்வைகள் வழங்கப்பட்டது.

சமுதாயப் பணி நிகழ்வில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் ஆர்.சக்திமுருகன், வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ண நீலா, திருவிக நகர் சக்தி பீட துணைத் தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, கோவில்பட்டிமன்ற தலைவர் அப்பாசாமி, புதிய துறைமுகம் மன்ற பொறுப்பாளர்கள் தமிழரசன், தனபால், பூல்பாண்டி, தூத்துக்குடி சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் கோபிநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.