சின்னமாடன்குடியிருப்பு ஸ்ரீ நாளால் சுடலைமாட சுவாமி திருக்கோவில் கொடைவிழா!

Sri.Sudalaimadasuwamy

சின்னமாடன்குடியிருப்பு ஸ்ரீ நாளால் சுடலைமாட சுவாமி திருக்கோவில் கொடைவிழா!

நாசரேத்,ஆக.11:சின்னமாடன்குடியிருப்பு ஸ்ரீ நாளா ல்சுடலைமாடசுவாமி திருக்கோவில் கொடைவிழா 5 நாட்கள் நடைபெற்றது. கொடைவிழாவிற்கு நாசரேத் காவல் ஆய்வாளர் ஜெயசீலன், உதவி ஆய்வாளர்கள் எபனேசர், ராய்ஸ்டன், வைகுண்டதாஸ்,இரத் தினசாமி நாடார்,சுகிர்தராஜ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்நாள் மாலை 6 மணிக்கு நாலுமாவடி எம்.வசந்தி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும், சுகிர்தராஜ் உபயதாரர் ஏற்பாட்டில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மேகா குழுவினரின்  இன்னிசைகச்சேரியும்,3வது நாள் மாலை 5 மணிக்கு 508 குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஏ.மகேஸ்வரி அஜித்ராஜ் பரிசுகளை வழங்கினார்.

இரவு 8 மணிக்கு விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு புகழ்”ஆந்தகுடி இளையராஜாவின் இளையகானம் நடைபெற்றது. 4-வது நாளான இன்று(11.08.2023)வெள்ளிக்கிழமை வில்லிசை, சாமி அழைத்தல் நிகழ்ச்சிகளும், இரவு 12 மணிக்கு பூக்குழி இறங்குதலும் நடை பெற்றது. 08.08.2023 செவ்வாய் இரவு முதல் நாளை 12.08.2023 இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.