டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் - கூட்டாம்புளி பிள்ளையார் கோவில் மீது மோதி விபத்து

Car accident

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் - கூட்டாம்புளி பிள்ளையார் கோவில் மீது மோதி விபத்து

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கூட்டாம்புளி பிள்ளையார் கோவில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயமடைந்தார்.   

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான காரை இன்று காலை (19.09.2023)செபத்தையாபுரத்தை சேர்ந்த குமரேசன் (27) என்பவர் அவரது வீட்டிலிருந்து கூட்டாம்புளி வழியாக புதுக்கோட்டை நோக்கி ஓட்டி வந்தார். போடம்மாள்புரம் - கூட்டாம்புளி இடையே உள்ள பாலம் அருகே கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்ட இழந்து சாலையோரம் உள்ள பழமைவாய்ந்த பிள்ளையார் கோவிலில் வேகமாக மோதியது.

 

இதில், பிள்ளையார் கோவில் கட்டிடத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. கார் முகப்பு பலத்த சேதமடைந்தது. டிரைவர் காயமடைந்தார். காயமடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதா அல்லது வேலைபளு காரணமாக டிரைவர் விட்டுவிட்டாரா ? என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.