மாநகராட்சியுடன் இணைப்பு - ஊராட்சி மக்கள் வரவேற்பு
Expansion News

தமிழகத்தில் சென்னை, கோவை,மதுரை,சேலம் உள்ளிட்ட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள்,25 பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன. தமிழகத்தின் மக்கள் தொகையில், 48.45 சதவீதம் பேர் நகர்புறங்களில் வசிக்கின்றனர். இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிவேக நகரமயமாக்கலைக் கருதி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மேற்கூறிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதனை சிலர் எதிர்த்தாலும், பெரும்பாலான மக்கள் ஆதரித்து வருகின்றனர். தற்போதுள்ள நிலையில் இருந்து மேல் நிலை அல்லது அடுத்த நிலைக்கு செல்வதற்கு இந்த விரிவாக்கம் அவசியம் என்று விபரம் அறிந்த மக்கள் கருதுகின்றனர். சிலரோ, ஏற்கனவே இருந்த சலுகைகள் கைவிட்டு போய்விடுமே என்கிற அச்சத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்கிறார்கள். ஆக தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள இந்த விரிவாக்க பணியை பொதுமக்கள் ஆதரிக்கின்றனர். கிராம ஊராட்சியில் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பிறகு தலைமை பொறுப்பிற்கு கடும்போட்டி இருக்கும். அதனால்தான் சிலர் எதிர்க்கின்றனர். சிலரோ, வரி வகைகள் அதிகமாகும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அதற்கு தக்க பயன்பாடுகள் இருக்கிறது என்பதை பலரும் விளக்கி வருகின்றனர். எனவே ஒட்டு மொத்த மக்களின் பேராதரவும் இந்த விரிவாக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி, சில்லாநத்தம், முள்ளக்காடு, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, மறவன்மடம்,குமாரகிரி ஆகிய ஊராட்சிகள் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்துள்ளது. இதனை ஒரு சிலர் தவிர பெரும்பாலான மக்கள் வரவேற்கின்றனர்.