செக்கப்பழங்கரை கிராம மக்களுக்கு மளிகைப் பொருள்கள்! - சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்

Nalumavadi

செக்கப்பழங்கரை  கிராம மக்களுக்கு மளிகைப்  பொருள்கள்! - சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்

நாசரேத்,டிச.24:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் செக்கப்பழங்கரை  கிராம மக்களுக்கு மளிகைப்  பொருள்கள்களை சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்.

தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள குரும்பூர் அருகில் உள்ள சொக்கப்பழங்கரை கிராமம் கடந்த கனமழையினால் ஆற்றின் கரையோரம் கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் இக்கிராம மக்கள் உணவு நீரின்றி தவித்து வந்தனர். இதனைக்  கேள்விப்பட்ட நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய நிறுவ னர் சகோ.மோகன் சி. லாசரஸ்  நேரில் சென்று பார் வையிட்டு முதற்கட்டமாக அவர்களுக்கு மூன்று வேளை உணவு  வழங்கி வந்தார். மேலும் வெள்ளத் தினால் பாதிக்கப்பட்ட  சொக்கப்பழங்கரை கிராமத் திற்கு  நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி. லாசரஸ் நேரில் சென்று அவர்களது  குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தற்காலிகமாக மளிகைப்  பொருட்களை வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட குடும் பங்களுக்கு மளிகைப் பொ ருட்கள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய அறக்கட் டளையும்,புது வாழ்வு சங்க மும் மற்றும் நல்ல சமாரி யன் சங்கமும் இணைந்து செய்திருந்தனர்.