குரும்பூர் அருகே வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நாசரேத் வாலிபர்கள் 2 பேர் உடல் மீட்பு.!

kurumpur

குரும்பூர் அருகே வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நாசரேத் வாலிபர்கள் 2 பேர் உடல் மீட்பு.!

நாசரேத் , டிச.24: குரும்பூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய நாசரேத்தை சேர்ந்த 2 வாலிபர்களின் உடல்களை போலீசார் மீட்டனர்.

நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த பத்மநாபன் மகன் முத்துலிங்கம்(23). இவர் கடந்த 18ம் தேதி ஏரலிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். சேதுக்குவாய்த்தான் அடுத்துள்ள காரவிளை வந்தபோது, அங்குள்ள வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் சென்றுள்ளது. பாலத்தை கடந்து சென்றுவிடலாம் என்று நடந்து சென்றபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இதேபோல் நாசரேத் 2வது ஐசக் தெருவை சேர்ந்த தனபால் மகன் டேவிசன்(27). இவர் கடந்த 18ம் தேதி ஊருக்கு வந்து கொண்டிருந்தார். காரவிளை வந்தபோது, வாய்க்கால் பாலத்தை கடந்தபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இருவரது குடும்பத்தினரும் இருவரையும் பல இடங்களில் தேடினர். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் இருவரை பற்றியும் எந்தவித தகவலும் இல்லை.

இந்நிலையில் நேற்று வெள்ளக்கோயில் வாய்க்கால் அருகே முத்துலிங்கத்தின் உடல் கிடந்தது தெரியவந்தது. இதேபோல் சுகந்தலை காலனி அருகே டேவிசன் உடல் கிடந்தது தெரியவந்தது. இருவரது உடலையும் குரும்பூர் போலீசார் மீட்டனர்.