நாலுமாவடியில் வியாபாரம், தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம்! திரளானோர் பங்கேற்பு
Nalumavadi News

நாலுமாவடியில் நடந்த வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர் வாத உபவாச ஜெபம் நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடந்தது .
இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தேவ செய்தி அளித்து, வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களின் ஆசீர்வாதத்திற்காக விசேஷித்த ஜெபத்தை நடத்தினார். வியாபாரம் மற்றும் தொழில் அதிபர்களின் சாட்சிகள் இடம் பெற்றன. கூட்டம் முடிந்ததும் அனைத்து ஊர்களுக்கும் திரும்ப செல்வதற்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, கோவை, சென்னை மற்றும் பல்வேறு மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.