நாசரேத் நல்ல சமாரியன் மன நல காப்பகத்தில் பொங்கல் விழா!

Nazareth news

நாசரேத் நல்ல சமாரியன் மன நல காப்பகத்தில் பொங்கல் விழா!

நாசரேத், ஜன. 16: நாசரேத் நல்ல சமாரியன் மன நல காப்பகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.  

நாசரேத்திலுள்ள  நல்ல சமாரியன் மனநல காப்ப கத்தில்  தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சீரும் சிறப் புமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முன்னாள் பேரூராட்சித் தலைவர் ரவி செல்வக்குமார் தலைமை வகித்தார்.

நாசரேத் அருகிலுள்ள திருமறையூர் மறுரூபஆலய குருவானவர் ஜாண் சாமு வேல் ஆரம்ப ஜெபம் செய் தார்.சிறப்பு விருந்தினர்கள் மனநலகாப்பகத்தில் உள்ள வர்களுடன் இணைந்து பொங்கலிட்டனர். இந்நிகழ் வில் ஓய்வு பெற்ற பேராசிரி யர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் மனநல காப்பகத்தி லுள்ளவர்களுக்குபொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாசரேத் காவல்துறையினர் பரிசுகளைவழங்கிசிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காப்பக நிர்வாகி ஜி.கிளாட்வின் ஜோசப் செய்திருந்தார்.