புதியம்புத்தூர் அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம், அன்னதான விழா

Puthiyampudur

புதியம்புத்தூர் அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம், அன்னதான விழா

புதியம்புத்தூர் அருள் மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் திருக்கோவில், அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக அன்னதான விழா இன்று(21.1.2024) நடைபெற்றது. காலை 8.00 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம்,பஞ்சகவ்யம்,வேதிகார்ச்சனை,வேத பாராயணம்,ஸ்ரீ மகாகணபதி ஹோமம்,சக்தி ஹோமம்,பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்திரஹோமம்,திரவ்யாகுதி,பூர்ணாகுதி,மகாபிஷேகம். 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கோவில் விமானகோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேக மகாகும்பாபிஷேகம், 12.00 மணிக்கு மகா தீபாராதனை,பிரசாதம் வழங்குதல், 12.30 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெற்றது. தூத்துக்குடி செல்வம்பட்டர் வருஷாபிஷேக விழா பூஜைகளை நடத்தினார். 

ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கே.ஆர்.புதுராஜாநாடார்,செயலாளர் கே.ராஜாநாடார்,பொருளாளர் பி.தருமராஜ்நாடார்,துணைத்தலைவர் டி.பி.தங்கராஜ்நாடார்,துணைச்செயலாளர் எம்.பி.செளந்திரபாண்டிநாடார், செயற்குழு உறுப்பினர்கள் புலவர் அ.கணேசன், ஆர்.ஆறுமுகச்சாமிநாடார்,டி.ஆர்.பொன்ராஜ் நாடார்,டி.எம்.செல்வக்குமார் நாடார் ஆகியோர் செய்திருந்தனர்.