தூத்துக்குடி மாவட்டத்தில் ஈஷா சார்பில் மருத்துவ முகாம்கள் - முதல் நாள் ஏரலில் துவங்கியுள்ளது

isha

தூத்துக்குடி மாவட்டத்தில் ஈஷா சார்பில் மருத்துவ முகாம்கள் - முதல் நாள் ஏரலில் துவங்கியுள்ளது

தென் மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் கோவை ஈஷா மையம் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இன்று(25.12.2023) முதல் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 

மேலும் சில நாட்கள் மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த ஈஷா யோகா மைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மருந்து,மாத்திரைகளுடன் மூன்று வாகனங்களில் வந்துள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை தொடங்கியிருக்கின்றனர். நாளை மருத்துவ முகாம் எந்த ஊரில் நடைபெறும் என்பதை இன்று மாலை அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.