நாசரேத்தில் புதிய நியோ டைடல் பூங்கா அமைக்க வேண்டும் - மதிமுக கோரிக்கை!

nazareth

நாசரேத்தில் புதிய நியோ டைடல் பூங்கா அமைக்க வேண்டும் - மதிமுக கோரிக்கை!

நாசரேத்,பிப்.21:தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய நியோ டைடல் பூங்கா நாசரேத்தில் அமைக்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட மதிமுக அவைத் தலைவர் நாசரேத் வே.இரஞ்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- மக்கள் நலன் சார்ந்து இயங்குகிற திராவிட வண்ண அரசு தமி ழ்நாடு முழுவதும் தஞ்சாவூர், சேலம்,வேலூர்,திருப்பூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்க ளில் புதிய நியோ டைடல் பூங்காக்கள் அமைக்க திட்ட மிட்டு உள்ளது மிக்கமகிழ்ச் சியாக இருக்கிறது. அதை வரவேற்கிறேன்.வாழ்த்துகிறேன்.இதன் மூலம் 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். 

அவ்வாறு தூத்துக்குடி மாவட்டத்தில் அமைய இருக்கிற டைடல் பூங்காத் திட்டத்தை எந்த தொழில் நிறுவனங்களும் அற்ற தென் பகுதியில் அமைத்தால், இப்பகுதி மக்களுக்கு நலம் பயக்கும். அதாவது ஏரல் வட்டம், நாசரேத்தில் இயங்காமல் மூடப்பட்டு கிடக்கும் திருச் செந்தூர் கூட்டுறவு நூற்பு ஆலை இருந்த சுமார் 25 ஏக்கர் நிலத்தில் இந்த பூங்காவை அமைக்கலாம்.  

நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்புறம் படித்த மென்பொறியாளர்கள் மிகுந்த பகுதி. மேலும், தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியப் பகுதி. ஆகவே, திராவிட வண்ண அரசு இத் திட்டத்தை நாசரேத்தில் நிறைவேற்றி தந்து, இப்பகுதி தொழில் வளர்ச்சிக்கு துணை புரிய,தாங்கள் ஆவனச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் இந்த மனுவின் நகலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக் கும், தமிழக மீன்வளம் மீன வர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் மின்னஞ்சல் வழியாக அனு ப்பப்பட்டுள்ளது. இவர்கள் நாசரேத் மீது அதிக அக்கறைக் கொண்டவர்கள் என் பதின் அடிப்படையில், இத் திட்டம் நாசரேத்தில் அமைய துணை நிற்பார்கள் என நாசரேத் வட்டார மக்கள் நம்புகின்றனர்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.