திருப்பத்தூர் கிறிஸ்து ராஜா பள்ளி சார்பில் நிவாரண உதவிகள்!

naareth

திருப்பத்தூர் கிறிஸ்து ராஜா பள்ளி  சார்பில் நிவாரண உதவிகள்!

நாசரேத்,ஜன.04:திருப்பத்தூர் கிறிஸ்து ராஜா பள்ளி  சார்பில் நிவாரண உதவி கள் மணத்தி கிராம மக்க ளுக்கு வழங்கப்பட்டன.

 தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றி யம் மணத்தி கிராமத்தில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கிறிஸ்து ராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் லியோ சங்கம் இணைந்து நிவாரண பொருட்களை வழங்கினர்.இதில் 100 குடு ம்பங்கள் பயன் பெற்றனர்.

நிகழ்ச்சியை  குருகாட்டூர்  சேகரகுரு டிக்சன் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழியங்கள், நல்ல சமாரியன் கிளப் சார்பாக அதன் நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் கிராம மக்களுக்கு பள்ளி மூலம் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வினை பள்ளி சார்பாக உடன்குடி தொழில் அதிபர் விஜயன், நாசரேத் ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பிரின்ஸ் ஜட்சன் மற்றும் ராஜன் அகஸ்டின் செய்திருந்தனர், பிரின்ஸ் ஜட்சன் நன்றி கூறினார்.