மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி தெரு முனை பிரச்சாரம் - நாசரேத்தில் ஏஐடியூசி சார்பில் நடந்தது

nazareth

மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி தெரு முனை பிரச்சாரம் - நாசரேத்தில் ஏஐடியூசி சார்பில் நடந்தது

நாசரேத், பிப்.14:நாசரேத் பேரூராட்சி அலுவலகம் எதிரில் மக்கள் பிரச்சினை களை மையப்படுத்தி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் சார்பாக நாச ரேத் பேரூராட்சி அலுவலகம் எதிரில் மக்கள் நலப் பிரச்சனைகளை மையப் படுத்தி  தெருமுனைப் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.உத விச்செயலாளர் சின்னத் துரை முன்னிலை வகித் தார். ஏஐடியூசி மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்டச் செயலாளர் லோகநாதன், மாவட்ட விவசாய சங்கத்தலைவர் ராமையா, மதிமுக மாவட்ட அவைத்தலைவர் இரஞ்சன், ஆழ்வை வழக்கறிஞர் சுடலைமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். 

திமுக நகர செயலாளர் ஜமீன் சாலமோன், அவைத் தலைவர் கருத்தையா, கட்டுமானச்சங்க தலைவர் டேவிட், வனக்குழுத்தலைவர் விஜயா, மூக்குபீறி கவுன்சிலர் ரீட்டா, கந்தசாமி, சுந்தரம், இஸ்ரவேல், அரிச்சந்திரன், சௌந்தரபாண்டியன், ராமர், ஆறுமுகனேரி ஏஐடியுசி தோழர்கள் உள்பட 60-துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.