நாசரேத் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா!

nazareth

நாசரேத் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா!

நாசரேத்,ஜன,15:நாசரேத் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. 

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஜ. பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.  பேராசிரியர்  சாமுவேல் வேதபாடம் வாசித்தார். பேராசிரியர்  சாம் தினேஷ்  ஆரம்ப ஜெபம் செய்தார். பேராசிரியை  ஜுலியட்  ஜெயபாக்கியம் வரவேற்றார். 

மாணவ_ மாணவிகளுக்கு கோலப்போட்டி, வடம் இழுத்தல், பானை உடைத்தல் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விடுதி மாணவிகளின் கிராமிய நடனம் இடம் பெற்றன. நிகழ்ச்சியை பேராசிரியர் ஸ்டேன்லி ஜாண்சன் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது. 

இதில் கல்லூரி நிர்வாக அலுவலர் வினோதா, துறைத்தலைவர்கள் ஆக்னஸ் பிரேமா, நிஷாரோஸ்பெல், ஜெமில்டா, ஜெனிபர் ஜாண்  மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ_மாணவிகள் கலந்து கொண்டனர்.  பேராசிரியை சித்ரா செல்வகுமாரி நன்றி கூறினார்.