நாசரேத்-திருமறையூரில் கிறிஸ்துமஸ் கீத பவனி!

nazareth

நாசரேத்-திருமறையூரில் கிறிஸ்துமஸ் கீத பவனி!

நாசரேத்,டிச.11.திருமறையூர் மறுரூப ஆலயத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி‌ 3 நாட்கள் நடந்தது.

நாசரேத்-திருமறையூர் மறுரூப ஆலயத்தின் சார் பில் கிறிஸ்துமஸ் கீதபவனி‌ மூன்று நாட்கள் திருமறை யூர் கேம்பஸ், ஐ.எம்.எஸ். நகர், ஒய்.எம்.சி.ஏ சதுக்கம், மார்க்கெட் தெரு ஆகிய இடங்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பாடல்கள் பாடி சென்றனர். 

இந்நிகழ்விற்கு சேகரத் தலைவர்‌ ஜான் சாமுவேல், சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன்துரை, ஆலய பணியாளர் ஆபிரகாம், டி.சி.மெம்பர்கள் ஜெயபால், தேவதாஸ், கமிட்டி உறுப்பி னர்கள் ஆசிர் துரைராஜ், ஜோயல் கோல்டுவின், பெஞ்சமின் செல்வராஜ், சேகர எழுத்தர் ஜெபக்குமார் மற்றும் வாலிப ஆண்கள், சபைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.