நாசரேத்தில் ரூ.26 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை

nazareth

நாசரேத்தில் ரூ.26 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி  மையம்  கட்ட பூமி பூஜை

நாசரேத் மார்ச்.4 :நாசரேத்தில் ரூ.26 லட் சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம்  கட்டுவதற்கு பூமி பூஜை  நடத்தப்பட்டது. 

நாசரேத் பேரூராட்சி 12 வது வார்டு திருவள்ளுவர் காலணியில் நமக்கு நாமே திட்டம் மூலமாக ரூ.26 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம்  கட்டுவதற்கு ஊர் மக்கள்  நிதி, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிதி மற்றும் அரசின் நிதி மூலமாக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  புதிதாக அங்கன்வாடி  மையம்  கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  துணை தலைவர் அருண் சாமுவேல்,  பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்வில்  நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார்,  இளநிலை  பொறியாளர் விஜயகுமார், உதவியாளர் பிரகாஷ்  மற்றும் ஊர் பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள்  அதிசயமணி, ஐஜினஸ்குமார்,ரவிந்திரன், பத்திரகாளி,ரதிசந்திரன், சாமுவேல், ஸ்டெல்லா அப்பாதுரை, பெனிட்ரோ, ஜெயா, அனி சாலமோன், ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி  12வது வார்டு  கவுன்சிலர்  ரவீந்திரன் நன்றி கூறினார்.