நாசரேத் நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் - அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

Nazareth DMK

நாசரேத் நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் - அமைச்சர்  அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

நாசரேத்,ஏப்.30:நாசரேத் நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தலை அமைச் சர் அனிதாஆர்.இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில்  நாசரேத் நகர திமுக சார்பில் நாசரேத் கே.வி. கே. சாமி சிலை பஜார் அருகில் நீர் மோர்பந்தல் திறப்புவிழா நடைபெற் றது.தண்ணீர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ ஜூஸ், பழ வகைகள், நீர், மோர் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்வில் திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலா ளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் இராமஜெயம், வழக்கறிஞர் கிருபாகரன்,நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சால மோன்,நாசரேத்பேரூராட்சிமுன்னாள்தலைவர்கள் ரவி செல்வக்குமார்,  மாமல்லன், பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல்,வார்டு கவுன்சிலர்கள் அதிசயமணி நல்ல துரை, திமுக மாவட்ட பிரதிநிதிகள் முருகத்துரை, அன்பு தங்கபாண்டி யன், நகர அவைத் தலைவர் கருத் தையா உட்பட பலர் கலந்து கொண் டனர்.