இந்தியாவை வழிக்கு கொண்டு வர அமெரிக்கா செய்யும் சதி - அதானி விவகாரம் குறித்து ரஷ்ய ஊடகம் தகவல்
Sputnik News

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில், பல நாடுகளில் கொடிகட்டி பறக்கிறார். அதேபோல் உலக அளவில் இந்தியாவிற்கு நற்பெயரை வாங்கி கொடுத்துவருகிறார் பிரதமர் மோடி. அதனால் எந்த நாட்டின் நிற்பந்தங்களையும் இந்தியா கண்டு கொள்வதில்லை. குறிப்பாக உலகையே நாட்டாமை செய்யும் அமெரிக்காவோடு உறவில் இருந்தாலும் அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும் என்பதில்லை. சுதந்திரமாக கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. அதுபோல் அதானியின் தொழில் உலக அளவில் இந்தியாவுக்கு அந்தஸ்தை உயர்த்தி காட்டுகிறது. இதெல்லாம் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. எப்போதும் நாம்தான் முதல் மற்றவர்கள் எல்லாம் பிறகுதான் என்று செயல்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது என்றுதான் பார்க்க வேண்டியது உள்ளது. உலக அளவில் நல்ல பெயர் வாங்கிவிட்ட பிரதமர் நரேந்திரமோடியை நேரடியாக குறைத்து பேசிவிட முடியாது. ஆனால் இந்தியாவில் உள்ள பெருந்தொழிலதிபர்களை குறைத்து பேசும்போது சேர்ந்து பிரதமர் பெயரையும், இந்தியாவின் பெயரையும் கெடுத்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள் போல தெரிகிறது. அந்த அர்த்தத்தில்தான் ரஷ்ய ஊடகம் ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனம், அமெரிக்காவின் முடிவுகளை ஏற்காமல் சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை வழிக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் செய்துள்ள திட்டமிட்ட சதி இது என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. கவுதம் அதானி, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், இந்திய அரசு வழிக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கையை அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் ஜனநாயக கட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு கவுதம் அதானி எக்ஸ் தளத்தில் வெளிப்படையாக வாழ்த்து தெரிவித்தார். இதுவும் அமெரிக்க ஆளும் கட்சிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. அதற்கு வழிவாங்கும் நோக்கத்துடன்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுக்கவும், உலக அரங்கில் வலிமையான போட்டி குரலாக இந்தியா ஒலிப்பதை முடிவு கட்டவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதானி மீது குற்றம் எழுப்பி இந்திய பங்குச் சந்தையை சரியச் செய்வது, அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எல்ஐசி ஆகிய நிறுவனங்களை சீர்குலைப்பதும் அமெரிக்க சதித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இவ்வாறு ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்னதாக அமெரிக்காவில் இருந்து எதாவது ஒரு புயல் கிளம்பி வருவதை அடிக்கடி பார்கிறோம். அது இதற்காகத்தான் இருக்குமோ?