திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 9ம் தேதி வைகாசி விசாகம் - திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்

Thiruchendur Murugan

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 9ம் தேதி வைகாசி விசாகம் - திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 9ம் தேதி திங்கள் கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்பார்கள். 

இதனை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே வருகிற 9ம் தேதி  4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, காலை 9:15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06101) காலை 10:50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து காலை 11:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06102)  மதியம் 12:55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

தொடர்ந்து திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06103) இரவு 10:30 மணிக்கு நெல்லை வந்தடையும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06104) நள்ளிரவு 12:30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.