சேலம் மாநாட்டிற்கு அமைச்சர் உதயநிதியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

Udhayanidhi stalin

சேலம் மாநாட்டிற்கு அமைச்சர் உதயநிதியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

சேலம் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலினிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கியுள்ளார்.  

திமுக மாநில இளைஞர் அணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்றது. அப்போது மாநில செயலாளராக இருந்த முக.ஸ்டாலின் அதற்கு தலைமை வகித்திருந்தார். அதன்பின் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21ம் தேதி சேலத்தில் 2வது திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறுகிறது. அதற்கு நன்கொடையாக ரூ.1 கோடிக்கான காசோலையை திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார். 

திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தூத்துக்குடி மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், உடனிருந்தனர்.