நாசரேத்தில் மர்காஷிஸ் ஐயர் நினைவு தினம்!

nazareth

நாசரேத்தில் மர்காஷிஸ் ஐயர் நினைவு தினம்!

நாசரேத்,ஏப்,27:நாசரேத்தில் மர்கா ஷிஸ் ஐயரின் நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது. 

நாசரேத்தின் தந்தை என்றழைக் கப்படும் மர்காஷிஸ் ஐயரின் 116- வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாசரேத் தூய யோவான் பேராலயத் தில் பரிசுத்த நற்கருணை ஆராத னை நடந்தது. தொடர்ந்து பேராலய வளாகத்தில் உள்ள மர்காஷிஸ் ஐயரின்  கல்லறைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.  தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந் தம் தலைமை வகித்து மர்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு மாலை அணிவித்தார். இதில் உதவிகுரு பொன்செல்வின் அசோக்குமார், சபை ஊழியர்கள் ஜெசு, ஜெபராஜ் சாமுவேல், சேகர பொருளாளர் எப னேசர், முன்னாள் சேகர பொருளா ளர் மர்காஷிஸ், திருமண்டல பெரு மன்ற உறுப்பினர் ஆண்ட்ரூஸ், நாசரேத் காமா ஜெபக்குழு  நிறுவ னர் சாமுவேல் மற்றும் சபை மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.