சிவத்தையாபுரம் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா - ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார்

uoorvasi Amirtharaj mla

சிவத்தையாபுரம் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா - ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார்

சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில்  மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார். 

சிவத்தையாபுரம் அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி கல்வி குழு தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் மற்றும் சிவத்தையாபுரம் ஊர் தர்மகர்த்தா பால்ராஜ் வரவேற்று பேசினார். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 39 மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். 

விழாவில் ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, செயல் அலுவலர் பிரபா, பள்ளி கல்வி குழு முன்னாள் தலைவர் ஆடிட்டர் சுயம்புராஜ், துணைத் தலைவர்கள் ஜெயபொன்ராஜ், முரளிதரன், துணை செயலாளர்கள் பாலசிங், கண்ணன், ஆலோசகர்கள் பாலசுப்பிரமணியன்,  கல்யாணசுந்தரம், வரதராஜ் ஸ்டாலின், சாயர்புரம் கூட்டுறவு வங்கி தலைவர் அறவாழி, முன்னாள் திருமகத்தா ராஜா, காங்கிரஸ் வட்டார தலைவர்கள் நல்லகண்ணு சொரிமுத்து பிரதாபன், ஜெயசீலன் துரை, ஊடக பிரிவு முத்து மணி நகர காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், சாய்ரபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பிரியா மேரி, கவுன்சிலர்கள் கண்ணன், ராமமூர்த்தி, இந்திரா, மற்றும் தி..மு..க. நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் பள்ளி மாணவ மாணவியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பவானி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர் கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.