மதுரை அதிமுக மாநாட்டில் பாடிய பாடகர் மீது திமுக மகளிர் அணியினர் போலீசில் புகார்

MADUARI ADMK MAANAADU

மதுரை அதிமுக மாநாட்டில் பாடிய பாடகர் மீது திமுக மகளிர் அணியினர் போலீசில் புகார்

மதுரை அதிமுக மாநாட்டில் திமுக தலைவர்களை அவதூறாக பாடியதாக பாடகர் மீதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும்  திமுக மகளிர் அணியினர் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், ’’மதுரையில் கடந்த 20ம் தேதி நடந்த அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோரை பொதுமேடையில் அவதூறாக பேசியும், அவர்களின் மக்கள் பணியை இழிவு செய்யும் விதமாக ஆபாசமான முறையில் பாடல்கள் பாடி, விமர்சனம் செய்து, பொதுமேடையில் சவால் விடும் விதமாக கொலை மிரட்டல் விடுத்து, புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டுள்ளனர். 

எனவே தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஆபாசமான பாடல்கள் பாடி அவதூறு செய்த நபர்கள் மீதும் அதற்கு தூண்டுதலாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாநாட்டு பொறுப்பாளர்கள், இதனை ஒளிபரப்பு செய்த நியூஸ் ஜே தொலைக்காட்சி செய்திபிரிவு நிர்வாகிகள் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.