ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமகுரு இராமானுஜ ஜீயர் மணத்தி கிராம மக்களுக்கு உதவிகள் வழங்கினார்

Srivilliputtur Aandaal

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமகுரு இராமானுஜ ஜீயர் மணத்தி கிராம மக்களுக்கு உதவிகள் வழங்கினார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமகுரு இராமானுஜ ஜீயர் மணத்தி கிராம மக்களுக்கு உதவிகள் வழங்கினார்

நாசரேத், ஜன.16: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமகுரு இராமானுஜ ஜீயர் கனமழையினால் பாதிக்கப் பட்ட மணத்தி கிராம மக்க ளுக்கு நலத்திட்ட உதவிக ளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி- திருச்செந் தூர் மெயின்ரோட்டில் தென் திருப்பேரை அருகிலுள்ள  கிராமம் மணத்தி. இக்கிரா மம் டிச.17 ஆம் தேதி நடந்த  கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அக்கி ராமமே தண்ணீரில் மூழ்கி யது. இக்கிராம மக்களை படகு மூலம் மீட்டு நாலுமா வடி தேவனுடைய கூடாரத் தில் அதனுடைய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் மணத்தி கிராமத்தில் தண் ணீர் வற்றும் வரைக்கும் அங்கேயே தங்க வைத்து அடைக்கலம் கொடுத்தார்.

மணத்தி கிராமம் இன்று வரையிலும் இயல்பு நிலை க்கு திரும்பாமல் அங்குள்ள மக்கள் மிகவும்  கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனைக் கேள்விப்பட்ட ஸ்ரீவில்லிபுத் தூர் ஆண்டாள் திருக்கோ யில் ஸ்ரீஸ்ரீஸ்ரீபரமகுரு இரா மானுஜ ஜீயர் ஒரு குடும்பத் திற்கு தேவையான அரிசி பலசரக்கு சாமான்கள், காய் கறிகள், போர்வை, வேஷ்டி, சேலை ஆகியவற்றை மனத்தி கிராமத்தில் உள்ள 100 குடும்பங்களுக்கு வழங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமகுரு இராமானுஜ 

ஜீயருடன், சித்தா டாக்டர் ராஜீவ்காந்தி, சிவகாசி தொழில் அதிபர் பிரபாகர், அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.