தூத்துக்குடியில் ஒரு நம்பிக்கை துரோகம் - 27 பவுன் நகையை திருடிய பக்கத்து வீட்டுக்காரர்

Theft

தூத்துக்குடியில் ஒரு நம்பிக்கை துரோகம் - 27 பவுன் நகையை திருடிய பக்கத்து வீட்டுக்காரர்

மிகவும் நெருக்கமான உறவினர் என்றோ, மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்றோ எதையும் நம்பி ஒப்படைத்துவிட கூடாது போல. 

தூத்துக்குடி மேலசண்முகபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் திருமணி (65). இவரது மனைவி செல்வி ஒய்வு பெற்ற ஆசிரியை. கடந்த 26.7.23 அன்று திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மகளை பார்க்க இவர்கள் கிளம்பினர். அப்போது இவர்கள் வீட்டை பூட்டி அதன் சாவியை பக்கத்து வீட்டுக்காரர் ஜெய்ஸ் (34) என்பவரிடம் கொடுத்திருந்தனர். 

இந்நிலையில் கடந்த 23ம்தேதி சரஸ்வதி பூஜை அன்று வீட்டிற்கு திரும்பினர். வீட்டை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 27 பவுன் நகை மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருமணி, தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தியதில் திருமணியின் பக்கத்து வீட்டில்  குடியிருந்து வரும் ஜெய்ஸ், அவரது மனைவி ஆஷா(28) ஆகியோர் வீட்டை திறந்து நகையை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 27 பவுன் நகையை மீட்டனர்.