தூத்துக்குடிக்கு வரும் 25ம் தேதி வருகிறார் முதலமைச்சர் - ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சித்தலைவர்

M.K.Stalin

தூத்துக்குடிக்கு வரும் 25ம் தேதி வருகிறார் முதலமைச்சர் - ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சித்தலைவர்

தூத்துக்குடி அருகே சூசைபாண்டியாபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25ம் தேதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சிக்குட்பட்ட சூசைபாண்டியாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் என சுமார் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். 

மேலும், அன்று காலையில் புதியம்புத்தூர் அருகேயுள்ள சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்படவுள்ள தனியார் கார் தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், சூசைபாண்டியாபுரத்தில் அரசு விழா நடைபெறும் இடத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.