கோரம்பள்ளத்தில் வரும் 22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்

Tuty Collector

கோரம்பள்ளத்தில் வரும் 22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளத்தில் வரும் 22.05.2026 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. மே மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது. இம்முகாமில்  வேலையளிக்கும் (Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும்,  பத்தாம்வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, BE. DIPLOMA, I.T.I டிரைவர் மற்றும் கணினிபயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகுதியுள்ள தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா (Bio data)மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது. 

இம்முகாமில்கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்கள் (Employers) மற்றும் வேலைநாடுநர்கள் (Jobseekers) அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in <http://www.tnprivatejobs.tn.gov.in>என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவுசெய்தல் வேண்டும்.மேலும் வேலைவாய்ப்புமுகாம் தொடர்பான பல்வேறுதகவல்களைபெற THOOTHUKUDI  EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்தும் மற்றும் இவ்வலுவலக தொலைபேசி எண்.0461-2340159-ஐ தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.