தூத்துக்குடி மாநகராட்சியில் ஏப்.30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி

Tuty city corporation

தூத்துக்குடி மாநகராட்சியில் ஏப்.30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி

தூத்துக்குடி மாநகராட்சியில் ஏப்.30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-25 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் அவர்கள், வரியில்  5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். எனவே, மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தங்களின் பங்களிப்பினை வழங்கி தள்ளுபடி சலுகைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.