நாசரேத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்!

nazareth

நாசரேத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்!

நாசரேத்,டிச.6:நாசரேத்தில் உலக மாற்றுத் திறனாளி கள் தினம் கொண்டாடப்பட் டது.

நாசரேத் ஒய்.எம்.சி சதுக்கத்தில் திருமறையூர் போலியோ இல்லத்தில் பயின்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களால் உலக மாற்றுத்திறனாளி கள் தினம் கொண்டாடப் பட்டது.விழாவில் நாசரேத் காவல் ஆய்வாளர் ராய்ட் சன்  தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் தலைவர் அகிலன் முன்னிலை வகித்து மாற்றுத் திறனாளி களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் உரையாற்றினார். 

விழா வில் போலியோ இல்லத் தில் பயின்ற பழைய மாணவ,மாணவிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை தனபால், கிறிஸ்டோபர்,மகாலெட்சுமி மற்றும் பழைய மாணவ, மாணவிகள்  இணைந்து  செய்திருந்தனர். சுந்தரி  நன்றி கூறினார்.