நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் புத்தாண்டு விழா!

nazareth

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் புத்தாண்டு விழா!

நாசரேத்,ஜன.10:நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் புத்தாண்டு விழா நடந்தது.

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலம் நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் புத்தாண்டு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமை வகித்தார். முதல்வர் சோபியா செல்வராணி வரவேற்றார். ஆசிரியை திவ்யா தெபோராள் வேதபாடம் வாசித்தார். மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதையடுத்து  பாட தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ_ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ் களும் வழங்கப்பட்டன. 

இதில்  ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி அன்டனி நன்றி கூறினார். மாணவி ஜாய் எமிமா நிறைவு ஜெபம் செய்தார்.