தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட் வரும் 8ம் தேதி திறக்கப்படுகிறது - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார்

thoothukudi city Corporation

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட் வரும் 8ம் தேதி திறக்கப்படுகிறது - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார்

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சார்பில் ரூ.57 கோடி மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. அதனை வரும் 8ம் தேதி நகர்புற வளர்த்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி  வைப்பதற்காக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறார். காலை 9 மணிக்கு திருச்செந்தூர் நகராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைக்கும் அமைச்சர், 10.30 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு திட்டங்களை துவக்கி  வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் 
 கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். 

இவ்வாறு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.