நாசரேத்தில் கனிமொழிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் பிரச்சாரம்!

election news

நாசரேத்தில் கனிமொழிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் பிரச்சாரம்!

நாசரேத், ஏப். 04:அகில இந்திய பார் வர்டு பிளாக் தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் நாசரேத் பேரூராட்சிப் பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட் பாளராக போட்டியிடும் கனிமொழி கருணாநிதிக்கு  ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு நாசரேத் பேரூராட்சி 1-வதுவார்டு வெள்ளரிக்காயூரணியில் வீடுகள் தோறும் சென்று  உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு துண்டு பிரதிகள் வழங்கி வாக்குகள் சேகரித்தனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில மாணவரணி செயலாளர் கொம்பையாபாண்டியன், ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய இளைஞ ரணி செயலாளர் வேட்டை செல்வம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடன் சென்றனர். முன்னதாக பிரச்சாரத்திற்கு வருகை தந்த அகில இந்திய பார்வ ர்டு பிளாக் தேசிய செயலாளர் சிலுவை சுரேஷ் தேவரை நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், நகர அவைத் தலைவர் கருத்தையா, வார்டு செயலாளர் உடையார் உட்பட 1-வது வார்டு திமுக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.